districts

img

சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணியின்போது 2 தொழிலாளர்கள் பலி  

சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில வருடங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 30 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.  

இதையடுத்து, சனிக்கிழமை நள்ளிரவில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஈடுபட்டு வந்தனர்.  

இந்த நிலையில் தீடீரென்று குழி தோண்டும் போது மண் சரிவு ஏற்பட்டதில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சாத்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் சாத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

போலீசார் விசாரணையில், பாதாள சாக்கடை திட்டப் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. 

;