games

img

நாளை பாராலிம்பிக்  தொடக்கம்...  தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்துகிறார்....  

டோக்கியோ 
மாற்று திறனாளிகளுக்காக நடத்தப்படும்  கோடை கால ஒலிம்பிக் தொடர் பாராலிம்பிக் என அழைக்கப்படுவது வழக்கம்.  இந்த தொடரின் 16-வது  சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது.  

செப்டம்பர் 5-ஆம் தேதி வரை  நடைபெறும் இந்த தொடரில்  மொத்தம்  163 நாடுகளைச் சேர்ந்த  4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.   22 விளையாட்டு பிரிவுகள் இருந்து மொத்தம் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. 

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தொடக்க விழாவில் தேசிய கொடி ஏந்துகிறார்.  கொரோனா பரவல் காரணமாக தொடக்க விழாவில் ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

;