games

img

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா - தடகள வீரர் உள்பட 6 பேருக்குப் பாதிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச் சென்று உள்ள ஒரு தடகள வீரர் மற்றும் ஐந்து ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹமாமாஸ்து நகரில் ஒரு ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.  ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு தடகள வீரர், ஒப்பந்த ஊழியர்கள்  மற்றும் ஒரு விளையாட்டு ஊழியர் உள்பட ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

;