india

img

தில்லியில் துப்பாக்கிச்சூடு - இரு பெண் உயிரிழப்பு

புதுதில்லியில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 
புதுதில்லியின் ஆர்.கே.புரத்தில் உள்ள அம்பேத்கர் பஸ்தி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இரு பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

;