politics

img

இலங்கை அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாமெனப் பெயர் மாற்றம் - தமிழக அரசு  

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் என்பது இனி "இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்" என அழைப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது .

வேளாண்மை , கால்நடை ,  மீன்வளம் , பால் வளத்துறை குறித்த விவாதம் சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது . அப்பொழுது  பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , இலங்கை அகதிகள் முகாமை , இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றி அழைக்கப்படும் என்று அறிவித்தார். இதைப்பற்றிப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் இல்லையென்றும் , அவர்களுக்குத் துணையாய் தமிழக மக்கள் இருப்பதாகவும் கூறினார். 

மேலும், கடந்தவார சட்டப்பேரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;