tamilnadu

img

பாம்புகளுடன் நடனமாடிய பெண்கள் மீது வழக்கு பதிவு

நவராத்திரி நிகழ்ச்சியின் போது பாம்புகளுடன் நடனமாடிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்கள், கையில் பாம்புகளை பிடித்த படி நடனமாடினர். இது சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இதை கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சிறுமி உட்பட 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
 

;