tamilnadu

img

மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு  - மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு திமுக மற்றும் அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இந்த ஆண்டிற்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது சாத்தியமில்லாதது என்று தெரிவித்தது. மேலும், அடுத்த கல்வியாண்டில் அதாவது இந்த கல்வியாண்டில் எவ்வளவு சதவீதம் அமல்படுத்த முடியும் என்று அறிவித்து விட்டுஇந்த ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.  

இந்நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் இதுவரை மத்திய அரசு எடுக்கவில்லை. எனவே திமுக சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் எவ்வாறு அமல்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இதுதொடர்பான நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

;