tamilnadu

img

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!  

சென்னை ஐஐடியில் மாணவர்கள் உட்ப 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னை ஐஐடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.  

தொற்று உறுதியானதையடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

;