tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 119 ஆக அதிகரிப்பு... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் தனது ஆட்டத்தை கொரோனா தொடங்கியுள்ளதால் பரிசோதனைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா அறிகுறியுடன் 61,153 மாதிரிகள் வந்தன. இதில் 59,854 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 6,972 கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன்மூலம் அறிகுறியுடன் வந்த மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 24,75,866 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 23,83,664 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது. 

;