tamilnadu

img

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று 

சென்னை
தமிழகத்தை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா இதுவரை 9 மக்கள் பிரதிநிதிகளை (எம்எல்ஏ-கள்) மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அடங்கும். இந்த 9  எம்எல்ஏ-களில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணமடைந்தார். ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு அரசின் முக்கியமான கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளதாகவும் தங்கமணி அதில்  எஸ்பி வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

;