tamilnadu

தன்னிறைவு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி  ஒதுக்கீடு...

சென்னை:
தமிழ்நாடு அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.ஊரகப் பகுதி மக்களின் சுயசார்பு தன்மையை ஊக்குவித்து பொதுமக்கள் பங்கேற்புடன் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசால் 2011-2012 ஆம் ஆண்டு முதல் தன்னிறைவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்துக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்க ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.இதனை பரிசீலித்த அரசு, ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும் பணிகள் குறித்த விவரங்களை மூன்று நிலைகளாக பிரித்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆணையில் தெரிவித்துள்ளது.

;