சென்னை, மார்ச் 28 - மக்களவைத் தேர்தலில் ‘இந் தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டா லினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முரு கன் உள்ளிட்டோர் இந்தியா கூட்ட ணியை ஆதரித்து பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளனர். இந்நிலை யில், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம், தமிழ்நாடு சீர்மர பினர் நல வாரிய உறுப்பினர் ராஜ் கவுண்டர் (புதிய திராவிடர் கழகம்), வடிவேலு ராமன் ( சமூக நீதி மக் கள் கட்சி), செங்குட்டுவன் (தென் னக அருந்ததியர் மக்கள் முன்னேற் றக் கூட்டமைப்பு), வாசு (கோவில் பூசாரி நலச் சங்கம்), பரிமளம் (தமி ழக விவசாயிகள் வாழ்வாதார முன் னேற்ற சங்கம்), பாலசுப்பிரமணி யன் (எஸ்ஆர்எம்). எஸ். பெரு மாள்சாமி (பூலித்தேவன் மக்கள் கழகம்), கே.வீ. இளங்கீரன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு), தனபதி (இந்திய விவசாயிகள்), சங்கரய்யா (ஐக் கிய விவசாயிகள் சங்கம்), மணி கண்டன் (மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம்) உள்ளிட்ட 16 அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் சமூக நீதிப் பேரவை, தமிழக நலிவுற்ற விவ சாயிகள் சங்கம், நம்மாழ்வார் இயற்கை விவசாயம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வியாழனன்று (மார்ச் 28) நேரில் சந்தித்து ஆதரவு தெரி வித்துள்ளனர்.