tamilnadu

img

இ-பாஸ் விற்பனை புகாரில் 4 பேரிடம் போலீஸார் விசாரணை

சென்னை:
இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின்பேரில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வந்த புகார்களின்பேரில் தமிழகம் முழுவதும் போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை விமான நிலைய பகுதிகளில் இ-பாஸ் வாங்கித் தருவதாகக் கூறிய நபர் உட்பட 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;