நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா செவ்வாயன்று (அக்.22) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நாடக ரத்னா’ விருது நாடகவியலாளர் பிரளயனுக்கும், ‘யுவ ரத்னா’ விருது குழந்தை எழுத்தாளர் விழியனுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.