tamilnadu

திருச்சி லலிதா  ஜூவல்லரியில் கொள்ளை

திருச்சி:
திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தேடப்பட்டு வந்த  சுரேஷ் எனும் நபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையிலான போலீசார், சுரேசை திருச்சிமத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

;