tamilnadu

img

பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 18 - கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண் டித்து பல்வேறு இடங்களில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன.

திருப்பூர் பெரியார் -அண்ணா சிலை முன்பு வெள்ளியன்று மாலை தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க மாவட்டச் செயலாளர் சன்.முத்துக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலை வர் ஆர்.குமார் கண்டன உரையாற் றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் விடு தலைச் செல்வன், வழக்கறிஞர் கனகுசபை, தீஒமு மாவட்ட துணைச்  செயலாளர் சி.கே.கனகராஜ் உட் பட திரளானோர் இந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர்.

கோபி கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோபிசெட்டிபாளையம் பெரியார் திடல் முன்பு பெரியாரிய மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;