tamilnadu

img

டாப் 4 தேசிய செய்திகள்

‘வலிமையின் நோக்கமே அமைதிதான்...!’
“இந்தியப் பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக் கான விருப்பம் மட் டுமே” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

‘இளைஞர்களுக்கு  ஆதரவாக இருப்போம்!’
‘‘அரசுப் பணிக்கான தேர்வுகளையும் புதிய நியமனங்களையும் ஆட்சியாளர்கள் நிறுத்தி விட்டார்கள். இதனால் வேலைவாய்ப்பு கோரிஇளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார் கள். அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்கவேண்டும்’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

‘கடலைக் கடைந்ததில் வந்த போதை மருந்து..’
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது நெருங்கிய தோழி உட்பட பலரை, போதை மருந்து வழக்கில் சிபிஐ கைது செய்து வருவதை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிவிமர்சித்துள்ளார். “தில்லியில் இருக்கும்தங்களது எஜமானர்களை ஏமாற்றுவதற்காக கடலைக் கடைந்த பின்னர் ‘அமிர்தம்’ எடுப்பதற்குப் பதிலாக ‘போதை மருந்தை’ கண்டுபிடித்துள்ளது சிபிஐ” என்று அவர் சாடியுள்ளார்.

‘எங்கள் நாட்டை  ஏன் இழுக்கிறீர்கள்..?’
மும்பையை, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது’ என பாஜக ஆதரவு நடிகைகங்கனா ரணாவத் கூறியதை பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹ்ர் தாரார்கண்டித்துள்ளார். “அன்புள்ள கங்கனா, தயவுசெய்து எங்கள் நாட்டின் பெயரை ஈடுபடுத்தாமல் உங்கள் அரசியல் மற்றும் பிற போர்களை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

;