tamilnadu

இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காது : அமைச்சர் கடம்பூர் ராஜூ 

தூத்துக்குடி:
இந்தி திணிப்பை தமிழக அரசு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து மட்டுமின்றி தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்கக்கூடாது என்பதுதான் என்று தெரி வித்தார். 

;