tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுப்பு... மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை

புதுதில்லி 
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்குடன் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில், பிரதமர் மோடி வியாழனன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், வெள்ளியன்று மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர்  ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவல், பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.  

;