tamilnadu

img

வாக்காளர் பட்டியலில் திருத்த 1.40 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, செப். 28- விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21ந்தேதி  நடைபெறுகிறது. இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமையன்று (செப்.28) செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- விக்கிரவாண்டி, நாங்கு நேரி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக் கிழமை கிடை யாது. தேர்தலுக்கு எவ்வளவு  கம்பெனி துணை ராணுவத்தி னரை அழைக்க வேண்டும்  என்பது பற்றி காவல்துறை யினர் ஆலோசனை செய்து வருகிறார்கள். தேர்தல் பொதுப்பார்வை யாளராக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரி களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு ஆந்திராவைச் சேர்ந்த வி. சின்னவீர பத்ருடு, நாங்குநேரி  தொகுதிக்கு எம்.விஜய சுனிதா ஆகியோர் பொதுப்  பார்வையாளராக வரு வார்கள்.

ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற பொதுவான கணக்கை நிர்ண யித்திருக்கிறோம். ஆனாலும்  1,400 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி களும் உள்ளன. நமது மாநி லத்திலிருந்து சட்டசபைத் தேர்தல் நடக்கும் அரியானா, மராட்டிய மாநிலத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங் களை அனுப்பி இருக்கிறோம்.  உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணை யத்துக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை அளித்தி ருக்கிறோம். வாக்காளர் சரி பார்ப்புத் திட்டத்தில் 12 லட்சத்து 11 ஆயிரம் பேர்  பங்கேற்றுள்ளனர். அவர்க ளில் 1.40 லட்சம் பேர் திருத்  தங்களுக்கு விண்ணப் பித்துள்ளனர். வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்த பிறகு சான்று ஒன்று அதற் கான செயலிக்கு அனுப்பி வைக்கப்படும். எம்.பி. தேர்தலுக்கு வைக்  கப்பட்டிருந்த வாக்காளர் பட்டியலை இந்த இடைத் தேர்தலுக்கும் பயன்படுத்தப் போகிறோம். ஆனாலும் தொடர்ந்து வாக்காளர் பட்டி யலில் திருத்தங்கள் செய்யப்  பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் துணைப் பட்டி யல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

;