tamilnadu

img

வெளி நாட்டில் இருந்து வந்த 31 பேருக்கு கொரோனா பரிசோதனை

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்திற்கு சமீபத்தில்   வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பேருக்கு கொரோனா பரிசோதனை ஞாயிறன்று செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து 31 பேர் சொந்த ஊர் வந்தனர். அவர்கள் வீடுகளிலும்  முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் 31 பேரும் ஞாயிறன்று  விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டனர்.  அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை அறிய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

அதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்டநிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

;