tamilnadu

img

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 431 பேருக்கு கொரோனா... 

மும்பை
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவும் மாநிலங்களில் முதன்மையாக இருப்பது மகாராஷ்டிரா தான். அங்கு கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அம்மாநில அரசு கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  அங்கு 431 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது. 

இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  5 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ளன நிலையில், பலி எண்ணிக்கை 269 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 789 ஆக உயர்ந்துள்ளது.

தினமும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் முனைப்பில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.  
 

;