world

img

ஈக்வடார் நாட்டில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி

ஈக்வடார் நாட்டில் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது ஈக்வடார் நாடு. இந்நாட்டின் கயாக்யூலி மாகாணம், குவாஸ்மா நகரில் பொதுவெளியில் சிலர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் துப்பாக்கியுடன் சிலர் வந்துள்ளனர். திடீரென கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களை நோக்கி அவர்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தாக்கினர். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

;