tamilnadu

img

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனே உத்தரவிடுக... ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மதுரை:
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர்மின்சார ரயில்களை இயக்கஉடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழக அரசின் சார்பில்செப்டம்பர் இரண்டாம்தேதியே சென்னையில்புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கிதெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் கடிதம்எழுதியிருப்பதாக முதல்வரின் அறிக்கை கூறுகிறது.
அப்படியிருக்க, ரயில்வேஅமைச்சகம் இன்னமும் மின்சார புறநகர ரயில்களைஇயக்க அனுமதி வழங்காதது ஆச்சரியமளிக்கிறது. மற்ற ரயில்களை இயக்க அனுமதி மறுத்து வந்தது மாநில அரசுதான். மாநில அரசு அனுமதிக்காததால்தான் நாங்கள் ரயில்இயக்கவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முன்புகூறியது. ஆனால் மாநிலஅரசு அனுமதி அளித்த பின்பும்இரண்டு மாதங்களாக ரயில்வே அமைச்சகம் இதன் மீது முடிவு எடுக்காதது ஏன்என்று மக்களுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்க வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின்படி ரயில்வே அமைச்சகம் எப்போது மற்ற பயணி  சிறப்பு வண்டிகளில் முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்கிறோமோ அப்போதுதான் புறநகர ரயில்களை இயக்க முடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது மாநில அரசுதான். மாநில அரசே அனுமதிவழங்கியபின் இதை முடிவெடுக்காமல் புறக்கணிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். தொழிலகங்களும் அலுவலகங்களும் 100 சதவீதம் திறந்த பிறகு இன்னமும் அவர்களின் பொதுபோக்குவரத்தை நிறுத்திவைத்திருப்பது கேள்விக்குரியதாகும்.ரயில்வே அமைச்சகம் இப்போது நடந்து கொள்வதை வைத்துப் பார்த்தால் லாபமீட்டும் வண்டிகளை மட்டும் இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.புறநகர் ரயில்கள் வெகுமக்கள் பயன்பாட்டு ரயில்கள்ஆகும்.  தேச நலனின் அடிப்படையில் பார்த்து இந்த வண்டிகளை இயக்க வேண்டும். மும்பை புறநகர் ரயில்களை அதிகம் இயக்கிட அனுமதி வழங்கப்படுவதாக தெரிகிறது. ரயில்வே அமைச்சகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;