districts

நில முறைகேடு புகார்

தூத்துக்குடி,ஏப்.24-ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளுக்காக சிப்காட் நிறுவனம் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர்.இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து ஆலை விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்ய சென்னை சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் சென்னையில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை இயக்குநர் கலியபெருமாள் தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் மனுதாரருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

;