districts

img

ரத்த தான முகாம்

அய்யம்பேட்டை, மார்ச் 29-  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், ரெகுநாதபுரம் அரசு  பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் நடை பெற்றது.  இதில் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவ மனை ரத்த வங்கி மருத்துவர் காயத்ரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் 50 மாணவர்களிடமிருந்து இரத் தத்தை சேகரித்தனர். இதேபோல் ‘‘வருமுன் காப்போம்’’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மாணவர்கள், ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

;