districts

ஆயப்பாடியில்  இலவச மருத்துவம், ரத்த தான முகாம்

மயிலாடுதுறை ஜூன் 10 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள ஆயப்பாடி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமூக நல அறக்கட்டளை, காரைக்கால் விநாயக மிஷன்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவம் மற்றும் ரத்தான முகாம்  சமூக நல அறக்கட்டளை யின் தலைவர் ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் நடைபெற்றது.  லயன்ஸ் கிளப் முன்னாள் செயலர் ஜெயக் குமார் முன்னிலை வகித் தார். முகாமினை ஆயப் பாடி  சமூக ஆர்வலர் ஜாஹிர்ஹூசைன் துவக்கி  வைத்தார். முகாமில் சுற்றி யுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் ஏழை, எளிய மக்கள் கலந்து கொண்ட னர். ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்த இளைஞர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மருத்துவ முகா மினை சமூக நல செயற் பாட்டாளர் அறக்கட்டளை யின் அறங்காவலர் ஆயப் பாடி முஜிபுர்ரஹ்மான், செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

;