districts

img

கும்பகோணம் அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

கும்பகோணம், மே 12- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் துவக்கி வைத்தார்.  தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியின் பேராசிரியர் முருகானந்தம், கும்பகோணம் அரசினர் கல்லூரியின் முதல்வர் துரையரசன், தேர்வு நெறியாளர்  ராமசுப்பிரமணியன், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மலர்கொடி மற்றும் மருத்துவர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இரத்ததான முகாமில் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் 130 மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரி யர்கள் இரத்த தானம் செய்தனர். 

;