districts

ஏப்.29-இல் கோடைகால பயிற்சி முகாம்: விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு

கரூர், ஏப்.26 - மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் 29.4.2024 முதல்  13.5.2024 வரை நடைபெற உள்ளது.  இதில் விளையாட்டு வீரர், வீராங் கனைகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், கரூர் மாவட்ட  விளையாட்டுப் பிரிவின் சார்பாக  மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்   29.4. 2024 முதல் 13.5.2024 வரை நடை பெற உள்ளது.  இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட அளவிலான கோடைகால  பயிற்சி முகாம் கரூர் மாவட்டத் தில் 29.4.2024 முதல் 13.5.2024 வரை தடகளம், கூடைப்பந்து, கை யுந்துபந்து, ஜூடோ, வளைகோல் பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு நடைபெற உள்ளது.  முகாமில் கலந்து கொள்ள தேவையான விதிமுறைகள் முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாண வரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள  இளைஞர்கள் கலந்து கொள்ள லாம். ஆதார் கார்டு நகலை கண்டிப் பாக சமர்ப்பித்தல் வேண்டும். முகாமில் கலந்து கொள்ளும்  அனைவருக்கும் பங்குபெற்ற தற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும்  ஒவ்வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே    சந்தா  தொகை ரூ.200/-ஐ செலுத்த  வேண்டும். சந்தாத் தொகையா னது ரொக்கமாகப் பெறப்பட   மாட்டது.   முகாமில் கலந்து கொள்பவர்கள்  26.4.2024 அன்று காலை 6 மணி முதல் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரின் தொலை பேசி. 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   எனவே கரூர் மாவட்டத்திலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்/வீராங்கனைகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;