தஞ்சாவூர், ஏப்.24- தஞ்சாவூர் ரயிலடி அருகே, ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பாரதி புத்தகாலயம் கடைத் திறப்பு விழா ஆர்.பன்னீர்செல்வம் தலைமையில் நடை பெற்றது. சா.கோதண்டபாணி வரவேற்றார். ஒன்றிய அரசின் மேனாள் நிதித்துறை இணை அமைச்ச ரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான ச.சு.பழநி மாணிக்கம் புத்தகாலயத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்வில், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலா ளர் பி.செந்தில்குமார், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.சந்திர மௌலி, முன்னாள் படைவீரர்கள் நலன் உதவி இயக்குநர் (ஓய்வு) மேஜர் சொ.சரவணன், காங்கி ரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் ஆர்.கே. நாகராஜன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் பேரா. மு.இளமுருகன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் ந.காளியப்பன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்டச் செயலர் ஆர்.தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ந.குருசாமி நன்றி கூறினார்.