india

img

ஊசியில்லா பிளாஸ்மா தடுப்பு மருந்து.... இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம்....

புதுதில்லி:
ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்து அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் மத்தியில் இருந்து தடுப்பூசி விநியோகம் ஆரம்பமாகும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிடைக்க தொடங்கும் என்றும்  அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். முதலில் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளும் பிறகு மாதத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.நாட்டின் 6ஆவது தடுப்பூசியாக ‘ஜைடஸ்கடிலா’ என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள, முதல் மரபணு (டிஎன்ஏ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ் - டி’க்கு இந்திய மருந்துகட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.இது 12 முதல் 18 வயதுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்புமருந்தாகும். மேலும், ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

;