tamilnadu

மக்களுக்கு விசுவாசத்தோடு பணியாற்றுவேன் வி.செந்தில்பாலாஜி

கரூர், மே 24-அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி அமோக வெற்றி பெற்றார். அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு விசுவாசத்தோடு பணியாற்றுவேன். தேர்தல் நேரத்தில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மக்கள் தீர்மானிப்பது. அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை எனது வெற்றியை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் அதிகாரத்தில், காவல்துறை கையில் இருக்கிறது, தேர்தல் ஆணையம் கையில் இருக்கிறது, அரசு இயந்திரம் கையில் இருக்கிறது என்ற மமதையில் இருந்தனர். இப்போது அது மக்கள் தீர்ப்புக்கு முன்பு காணாமல் போய் விட்டது என்றார்.

;