world

பாலஸ்தீன-இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும்: பொது கருத்து கணிப்பில் வலியுறுத்தல்

பெய்ஜிங், ஏப்.27- சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். மேலும் கடுமையான மனித நேய நெருக்கடி நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று   90.5 விழுக்காட்டினர் உறுதியாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தவிரவும், பல தரப்புகள் சர்வதேச மனித நேய சட்டக் கடப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறை தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் 93.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில், வெளிநாட்டுக்கான உதவிச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம்  இஸ்ரேலுக்கு தொடர்ந்து 2600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை அந்நாடு வழங்கும். இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தவர்களில் 92 விழுக்காட்டினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் மற்றும்  சர்வதேச பொது கருத்துக்களின்படி, பாலஸ்தீன -இஸ்ரேல் பிரச்சனையை நியாயமாகத் தீர்க்க வேண்டும் என்று சுமார் 88 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

;