districts

img

இந்து - இஸ்லாமியர் மத நல்லிணக்க தேர்த்திருவிழா!

நாமக்கல், மார்ச் 28- ராசிபுரம் அருகே இந்து – இஸ் லாமியர்களின் மத நல்லிணக்க தேரோட்டத்தின் ஒருபகுதியாக, அனைவரும் மாறி மாறி சந்தனங் களை பூசி மகிழ்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் நெசவாளர்கள், விசைத்தறியா ளர்கள் அதிகம் நிறைந்த பகுதியா கும். இப்பகுதியில் உள்ள சிவசுப் ரமணியர் கோவிலின் பங்குனி உத் திர தேர்த்திருவிழா ஆண்டுதோ றும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ் வாக, இந்து – இஸ்லாமிய சமுதாய  மக்கள் ஒன்றுகூடி, சந்தனம் பூசும்  நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.  இதன்படி, இந்தாண்டு இக்கோ விலின் தேர்த்திருவிழா கடந்த மார்ச்  25 ஆம் தேதி தொடங்கியது. இத னைத்தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், காலம் காலமாக பின் பற்றப்பட்டு வரும் இந்து – இஸ்லா மிய மக்கள் ஒன்று திரண்டு மஞ்சள்  பூசிக்கொள்ளும் நிகழ்வு நடை பெற்றது. குருசாமிபாளையம் ஊர்  பெரிய தனக்காரர் தியாகராஜன், ராசிபுரம் கிழக்குத் தெரு பள்ளி வாசல் தலைவர் ஜி.கே.உசேன் ஆகியோர் தலைமையில், சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. ஊரின்  மையப்பகுதியில் அமைந்துள்ள மரத்தடியில், இந்துகள் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் ஒன் றாக இணைந்து, கொடிமரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி எல் லோரும் நலமாக இருக்க பிரார்த் தனை செய்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பு  மக்களும் ஒருவருக்கு ஒருவர்  ஆரத்தழுவி சந்தனம் பூசிக்கொண் டதுடன், வீடுகள்தோறும் சென்று  கதவுகளில் சந்தனம் பூசி மகிழ்ந் தனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததுடன், மதநல்லிணக்கத்திற்கு உதார ணமாய் இருந்தது. இக்கிராமத்தில் கோடை காலத்தில், ஏற்படும் கொள்ளை நோய்களை தடுக்கும் வகையில், இரு மதத்தினரும் இணைந்து நடத்தும் நம்பிக்கை அடிப்படையில் சந்தனம் பூசும் விழா 151 ஆண்டுகாலமாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

;