districts

img

சிறு குறு தொழிற்கூடங்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உறுதி

கோவை, மார்ச் 28- சிறு, குறு தொழிற்கூடங்களின் பிரச்சினைகளை தீர்க்க திமுக வேட்பாளரான எனது குரல் நாடாளு மன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என கோவை நாடாளுமன்ற வேட்பாளர் கண்பதி ராஜ்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட் பாளர் கணபதி ராஜ்குமார், வியாழ னன்று 68 வது வட்டம் ரோஸ்மின்  நகர், சிவானந்தா காலனி பகுதிகளில்  பிரச்சாரத்தை துவக்கினார். சிவா னந்தாகாலனி பேருந்து நிலையம், 100 அடி சாலை, கிராஸ் கட் சாலை,  67 வது வட்டம், சக்தி சாலை, விகேகே மேனன் சாலை, சித்தாப்பு தூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று  திமுகவிற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார்,  பட்டேல் சாலையில் அதிகளவில்  உள்ள சிறு, குறு தொழிற்கூடங்களி லும் வாக்கு சேகரித்தார்.  அப்போது ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு  என ஒன்றிய அரசால் சிறு குறு  தொழிற்கூடங்கள் அழிவு பாதையை  நோக்கி சென்று கொண்டிருக்கின் றது. இதன் அழிவு பாதையை தடுக்க  திமுக அரசால் மட்டுமே முடியும்.  மேலும், திமுக அரசு தொழிற்துறையி னருக்கு என்ன திட்டங்கள் செய்துள் ளது என்பதையும் அங்கிருந்தவர்களி டம் எடுத்து கூறி வாக்கு சேகரித் தார்.  இதைத்தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர் வால் திண்டாடி வருகின்றனர். கடந்த  10 ஆண்டுகால அதிமுக ஆட்சியி லும் இவர்களுக்கு தேவையான வற்றை செய்து கொடுக்கப்பட வில்லை. அதேசமயம் தமிழக முதல் வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு,  கோவையில் உள்ள சிறு குறு தொழிற் கூடங்களை மீட்டெடுக்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டும் இன்றி, கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தது, திமுக ஆட்சியில் தான். தற்போது மேலும் அங்கு புதிய நிறுவனங்கள் வர உள்ளது. சிறு, குறு தொழில் நிறுனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. பெட் ரோல் - டீசல் விலை உயர்வு குறைக் கப்படும் என திமுக தேர்தல் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. சிறு,  குறு தொழிற்கூடங்களின் பிரச்சினை களை தீர்க்க திமுக வேட்பாளரான எனது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என தெரிவித்தார். இப்பிரச்சாரத்தில் இந்தியா கூட்ட ணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதி முக, கொமதேக உள்ளிட்ட கட்சிக ளின் மாவட்ட தலைவர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.

;