districts

img

போஸ்நகரில் 384 அடுக்குமாடிக் குடியிருப்பு முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, டிச.8-  புதுக்கோட்டை போஸ்  நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் ரூ.35.14  கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள 384 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொ லிக்காட்சி வாயிலாக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து போஸ்நகரில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பய னாளிகளுக்கு குடியிருப் பிற்கான ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில், சட்ட மன்ற உறுப்பினர்கள் எம். சின்னதுரை (கந்தர்வ கோட்டை), டாக்டர்.வை. முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறி ஞர் கே.கே.செல்லப்பாண்டி யன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட் டாட்சியர் முருகேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

;