election-2019

மீண்டும் விடுபட்ட 176 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகையில் தொடர் முறைகேடு

சீர்காழி, ஏப்.13- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள் ளது. இங்கு திருமயிலாடி, கடைக்கண் விநாயகநல்லூர், சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டிற் கான பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர். 18 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் 176 விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு தொகை வழங்கவில்லை.இதே போல் 2017-18 ஆம்ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை 36 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்பு விடுபட்ட 176 விவசாயிகளுக்கு மீண்டும் விடுபட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பயிர்க் காப்பீட்டுத் தொகை 176 விவசாயிகளுக்கு விடுபட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காப்பீட்டு நிறுவன மேலாளரை அணுகி கேட்டபோது, அனைத்துத் தொகையும் கும்பகோணம் கூட்டுறவுவங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.மேலும் காப்பீட்டு நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுவதும்விவசாயிகளுக்கு வழங்காமல் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி விடுபட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

;