tamilnadu

சிறுமியிடம் ஆபாச பேச்சு - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கோவை, ஜூன் 24 -  மளிகை கடையில் வேலைப்பார்த்து வந்த 16 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடு பட்ட மளிகைகடை உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் கோவையில் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமியின் உறவினர் அதேபகுதியில் இயங்கி வரும் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் வேலைக்காக சேர்த்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடைக்கு வாடிக் கையாளர்கள் வராதபோது, கடையின் உரிமையாளர் ராமலிங்கம் சிறுமியிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையிலும், ஆபாசமாக பேசியும் பாலியல் சீண்டலில் ஈடு பட்டுள்ளார்.

 இதுதொடர்பாக சிறுமி தனது உறவினரிடம் கூற அந்த சிறுமியின் உறவினர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்  அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், ராமலிங் கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;