tamilnadu

img

திருவொற்றியூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பேன்: கலாநிதி வீராசாமி வாக்குறுதி

சென்னை, மார்ச் 28- திருவொற்றியூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பேன் என்று கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அப்போது வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி பேசுகையில், எண்ணூர், மணலி பகுதியில் மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனை, பொறியியல் கல்லூரி கொண்டு வருவேன் என்று உறுதி அளித்தார்.

இதில் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், தொகுதி மேற்பார்வையாளர் சி.தசரதன், மண்டலக் குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், திமுக பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர்கள் எஸ்.கதிர்வேல், டி.பாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

;