tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1.வட சென்னை நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். இதையொட்டி சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.கருணாநிதி, மாநில பொறியாளர் அணி செயலாளர் இரா.நரேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2.நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து “ஒரு விரல் புரட்சி”என்ற தலைப்பில் வரைந்திருந்த ரங்கோலி கோலம் அனைவரையும் கவர்ந்தது.

;