tamilnadu

img

இடஒதுக்கீட்டில்  பள்ளி மாணவர் சேர்க்கை 

சீர்காழி, ஜூன் 6-தமிழகம் முழுவதும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நாகை மாவட்டம் சீர்காழி எஸ்.எம்.எச்.மெட்ரிக் பள்ளியில் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் ஆன்லைனில் பதிவு செய்த பெற்றோர்கலந்து கொண்டனர். இக்குலுக்கலுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஆர்.பூவராகவன், ஆசிரியர் பயிற்றுனர் கே.ஜெய்சங்கர் மற்றும் கொள்ளிடம் ஒன்றியம் திட்டப்படுகை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்களே, குலுக்கலுக்கான எண்களை குலுக்கிஎடுத்தனர். பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலுமற்றும் பள்ளி முதல்வர் கே.தங்கதுரை ஆகியோர் நிகழ்ச்சிஏற்பாடுகளைச் செய்தனர்.

;