tamilnadu

img

தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கிடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உதகை, ஜூலை 13- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்ப டுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் திங்களன்று சேரம்பாடி பஜாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஜே.வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் கோயா, எம்.கே.பாபு ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜன், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர்.

இத னைத்தொடர்ந்து, கூடலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாகவும், நாளை முதல் வேலை இல்லாத குடும்பங்களில் ஒரு வருக்கு வேலை வழங்கப்படும் என வும் தெரிவித்துள்ளார்.

;