tamilnadu

img

கொரோனவை வென்று பணிக்குத் திரும்பினார் பிரிட்டன் பிரதமர்...

லண்டன் 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனை புரட்டியெடுத்து வருகிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பூரண ஏப்ரல் 12-ஆம் தேதி வீடு திரும்பினார். அவர் 2 வாரங்கள் தனிமையிலிருந்து இன்று மீண்டும் பிரதமர் பணியைக் கவனிக்கத் தொடங்கினார். கடந்த ஒருமாதம் பிரதமர் பொறுப்பைக் கவனித்த பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் மீண்டும் பழைய பொறுப்பைக் கவனிக்கச் சென்றுள்ளார். 
பிரிட்டனில் தினமும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடு குறித்துப் பல அதிரடி திட்டங்களைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.     
 

;