tamilnadu

img

ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைப்பு

விருதுநகர், ஜன.6- பண மோசடி வழக்கில் கடந்த டிசம்பர்  17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத் தால் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அன்று விருதுநகரில் நடந்த  அதிமுக ஆர்ப்பாட்டம் முடிந்த கையோடு தலைமறைவானார். சரியாக 20 நாட்கள் போலீசுக்கு போக்கு காட்டி தலைமறைவாகவே இருந்த ராஜேந்திரபாலாஜியை ஜனவரி 5 முற்பகல் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழக தனிப்படை போலீஸ். ஆயுர்வேத சிகிச்சைப் பின்னணி 17ஆம் தேதி தலைமறைவான ராஜேந்திரபாலாஜி நேராக தென்காசி வழியாக செங்கோட்டை புளியரை சென்று அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் ஓர் ஆயுர்வேத வைத்திய சாலையில் சில நாட்கள் தங்கி யிருந்துள்ளார். அங்கே சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு வேறு வேறு கார்களில் ஏறி பல நகரங்களுக்கு சென்றி ருக்கிறார். பின் மீண்டும் ஓசூர் சென்றி ருக்கிறார். அவர் ஓசூர் சென்று சேர்ந்த  நிலையில்தான் டிசம்பர் 23 ஆம் தேதி ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டது. அதனால் அவரால் விமான நிலையம் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எங்கே தங்குவது?  உதவிய முன்னாள் அமைச்சர்

இந்த நிலையில்தான் டிசம்பர் இறுதி வாரம் முழுதும் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே டேரா அடித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. அப்போது தனது முன்னாள் அமைச்ச ரவை சகாவான கே.பி. அன்பழகனின் உதவியை நாடியிருக்கிறார். முன் னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் ஓட்டுநர் ஆறுமுகம் இருவரும் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியுடன் ஒன்றாக இருந்ததும், தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பொன்னுவேலுவை டிசம்பர் 29ஆம் தேதி மதியம் தர்மபுரி மாவட்டத் தில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர் போலீசார். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் ஓட்டு நர் ஆறுமுகத்தைக் கைது செய்தனர். கிருஷ்ணகிரி முதல் ஹசன் வரை அவரிடம் தனிப்படை நடத்திய  விசாரணையில்தான் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் முகாமிட்டிருப் பது தெரியவந்துள்ளது. ஆறுமுகத்தை விசாரிக்க வேண்டிய வகையில் விசா ரித்த போலீசார். ‘உண்மையை சொல்லி விட்டால்  கேஸ் எதுவும்போடமாட் டோம். இல்லையென்றால் தலை மறைவு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தில் வழக்குப் போட்டு கைது செய்வோம்’ என்று சொன்னதும் ஆறுமுகம் அப்படியே அனைத்தையும் கக்கிவிட்டார். அதன்படி, ராஜேந்திரபாலாஜிக்கு கே.பி. அன்பழகன் மட்டுமல்ல, முன்னாள் அமைச்சர் ஓசூர் பால கிருஷ்ணரெட்டியும் உதவியிருக்கிறார். அவர்கள்தான் பாஜக பிரமுகர் ராம கிருஷ்ணனைப் பிடித்து கர்நாடகாவின் உள் வட்டாரப் பகுதியில் ராஜேந்திர பாலாஜியை தங்க வைக்க ஏற்பாடு  செய்திருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் உள்ள மாவட்டம் ஹசன். மலைக்காடுகள் நிறைந்த இயற்கை எழில் மிகுந்த இடம். ஹசனில்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ஏவப்படும் செயற்கைக் கோள்களை கண்காணிக்கும் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. அந்த நிலையத்தின் அருகேதான் ராஜேந்திரபாலாஜியை தங்க வைத்திருக்கிறார் பாஜக பிர முகர் ராமகிருஷ்ணன்.

‘ஹசன் மிஷன்’

புத்தாண்டுக்கு பிறகு ஹசன் மாவட்டத்திலே ராஜேந்திரபாலாஜி சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த போலீஸ் டீம், பெங்களூரு முதல் ஹசன் வரையிலான அனைத்து டோல்கேட்டுகளிலும் தனிப்படை போலீ சாரை கண்காணிப்பில் ஈடுபடுத்தினர். ஒரு டீம் ஹசன் மாவட்டத்துக்கும்சென் றது. அங்கே ஹசன் மாவட்ட காவல் துறையினரிடம் விஷயத்தைச் சொல்லி  ராஜேந்திரபாலாஜிக்கு பின்னே இருக் கும் அரசியல் பின் புலத்தையும் வழக்கு பின் புலத்தையும் விளக்கியுள்ளனர். மெல்ல மெல்ல ராஜேந்திரபாலாஜி யை சுற்ற விட்டு ஜனவரி 5 ஒரு கோயி லுக்கு சென்று கொண்டிருந்த அவரது காரை ஹசன் கலெக்டர் அலுவலகம் அருகே சுற்றி வளைத்தனர் தனிப்படை போலீசார். போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் ராஜேந்திரபாலாஜி எதுவுமே பேசவில்லை. காருக்கு முன்னே இன்னொரு கார் நின்று சில வார்த்தைகள் சத்தமாக பேசப் பட்டதை பார்த்த அங்கிருந்த பொது மக்கள் கிட்னாப் கிட்னாப் என்று சத்தம் போட்டனர். ஆனால் ராஜேந்திர பாலாஜி அருகே சென்ற டி.எஸ்.பி.  ‘வாங்க போலீஸ் வண்டிக்குப் போக லாம்’என்றதும் காவி வேட்டி டிஷர்ட் போட்டிருந்த ராஜேந்திரபாலாஜி எதுவும் சொல்லாமல் ஏறி போலீசார் வந்த காரில் அமர்ந்துகொண்டார். அவ ருடன் இருந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ராஜேந்திர பாலாஜி உட்பட கைதானவர்கள் அனைவரை யும் ஹசன் டவுனில் உள்ள அரசு மருத்துவ மனையில் போலீசார் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதையடுத்து ஹாசன்  மாவட்டக் காவல் துறை கண்காணிப்பா ளர் சீனிவாசன் கவுடா உதவியுடன் கைதானவர்களைத் தனிப்படை போலீ சார் ஹசன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் நீதிமன்ற உத்தரவு பெற்று ஹசனில் இருந்து 229 கிலோ மீட்டர்  காரிலேயே தமிழகத்துக்கு அழைத்து  வந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு மேல் விருதுநகருக்கு கொண்டுவரப்பட்டார் ராஜேந்திர பாலாஜி.

15 நாள் நீதிமன்றக் காவல்

நள்ளிரவு முதல் விடிய விடிய ராஜேந்திர பாலாஜியை விசாரித்த போலீ சார் வியாழன் (ஜனவரி 6) காலை  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்  ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந் திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால், போலீசாரோ ராஜேந்திர பாலா ஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனு மதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ராஜேந்திரபாலாஜி திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் பட்டார்.
 


 

;