world

img

அதிகரித்து வரும் கொரொனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
     கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் உலக அளவில் கோடிக்கணக்கில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலரும் வருமனம் இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டனர்.
 இந்நிலையில் இந்திய அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுளாது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்திய அளவில் கொரோனா தொற்று 5000 கடந்து 5,335 ஆக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் 100 க்கும் குறிவாக இருந்த கொரோனா தொற்று தற்போது 200 தாண்டியுள்ளது நேற்று ஒரே நாளில் 2 கொரோனா உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் எற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 25,587 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

;