world

img

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு  

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது.  

நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  அதன்படி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் கட்டாயமில்லை.

மேலும் விமான நிலையத்திற்கு வந்தபின் அறிகுறி உள்ளவர்களை மட்டும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. 

;