tamilnadu

img

இந்தியாவின் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது...

தில்லி 
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் கடந்த ஒருமாத காலமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தில் உள்ளது. அதாவது உலகின் கொரோனா மையங்களாக உள்ள அமெரிக்கா, பிரேசிலை பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 வார காலமாக இந்தியா கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் (தினசரி) பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தில் உள்ள நிலையில், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 59,645 (ஆக., 26 - மாலை நிலவரம்) ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 32.39 லட்சமாக உள்ளது. இதுவரை 24.68 லட்சம் குணமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகள் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இன்று இரவுக்குள் நாட்டின் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை தொடும் சூழல் உருவாகியுள்ளது.   

;