districts

img

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் நலனுக்கு எதிராகவும் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) தலைவரை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் அருகே வெள்ளியன்று (பிப். 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ஆர்.பிரபுதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் கே.ராஜேந்திரன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் அ.மாயவன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்  கழகத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.பெருமாள்சாமி, பிற அமைப்பின் நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், டி.தேவிச்செல்வம், ஏ.கண்ணன், பூபாளன், மணிவண்ணன், சாந்தகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னதாக கே.சண்முகசுந்திரம் வரவேற்றார். எஸ்.கே.குலாம் தஸ்தகீர் நன்றி கூறினார்.

;