districts

img

குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் செ .ஆஞ்சி தலைமையில் செவ்வாயன்று மதுரை மாட்டுத்தாவணி எதிரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம்  முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்த 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்ட அகவிலைப்படியை வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் 01.01.2022 முதல் வழங்குவது போல், வாரியத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 01.01.2022 முதல் வழங்க வேண்டும்.  

ஓய்வு பெற்ற வாரிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நிலுவையில் உள்ள ஓய்வுக் கால பலன்கள் பணிக்கொடை, ஓய்வூதியம், விடுப்பு கால பண பயன்கள் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். 

அதனைதொடர்ந்து கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச் செயலாளர் எஸ். லோகநாதன், மாநிலப் பொருளாளர் எம். மலைராஜன் ஆகியோர் பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை யாசிந்த், இராமநாதபுரம் தட்சிணாமூர்த்தி, திருச்சி நாகேந்திரன், சேலம் வெங்கடசலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து மாநில நிர்வாகி ராமசாமி நன்றி கூறினார்.

;