games

img

அஸ்வின் வெற்றி: சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம்  

மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய சட்ட விதிகளை புதன்கிழமை அறிவித்துள்ளது.  

2019 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போதைய விதிமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம், அஸ்வினின் நீண்ட காலப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022 அக்டோபர் 1முதல் அமலுக்கு வர உள்ளது.

புதிய விதிமுறைகள் பின்வருமாறு:    

விதி 18.11 -  களத்தில் இருக்கும் ஒரு வீரர் ஆட்டமிழந்தவுடன், புதிதாக உள்ளே வரும் வீரர் தான் இனிமேல் ஸ்டிரைக்கில் நிற்பார். அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார்.    

விதி 21.4 -  விளையாட்டின் நடுவே மைதானத்தில் யாராவது மனிதர்களோ, விலங்குகளோ ஏதேனும் இடையூறு ஏற்படுத்தினால் அந்த பந்து டெட் பால் என்று அறிவிக்கப்படும்.    

விதி 21.4 - பந்தை வீச ஓடி வந்து பந்து வீசாமல் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பந்தை தூக்கி எறிவது இனி டெட் பாலாக கருதப்படும். இதுவரை இது நோ பால் என்று அழைக்கப்படுகிறது.    

விதி 22.1 - பந்து வீச்சாளர் ரன்-அப் தொடங்கிய போது பேட்ஸ்மேன் நின்றிருந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லும் பந்து வைட் என்று புதிய வீதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தற்போது பந்துவீசுபவர் ரன்-அப் தொடங்கிய பின் பேட்ஸ்மேன் நகரும் இடத்தில் இருந்து விலகிச் சென்றால் மட்டுமே வைட் கொடுக்கப்படுகிறது.        

விதிகள் 27.4 மற்றும் 28.6 - பந்து வீசும் போது பீல்டர் செய்யும் ஆட்சேபனைக்கு உரிய காரியத்தால் டெட் பால் என்று தற்போது கூறப்படுகிறது. இனி, பீல்டங் அணியின் இந்த நியாயமற்ற செய்கைக்கு பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி ரன்களாக வழங்கப்படும்.        

விதி 38.3 - மேன்கேடிங் முறையில் ஆட்டமிழந்தால் அது ரன் அவுட் என்று கணக்கில் கொள்ளப்படும்.    

விதி 41.3 - கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உமிழ்நீர் பயன்படுத்தி பந்தை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறையை நிரந்தரமாக ஆக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.         

;